Saturday 29 December 2012

வாருங்கள் வரலாறு படைப்போம் .....!





மலையும் மலை சார்ந்த நிலம் -   குறிஞ்சி.
காடும் காடு சார்ந்த நிலம் - முல்லை .
வயலும் வயல் சார்ந்த நிலம் - மருதம்.
கடலும் கடல் சார்ந்த பகுதிகள் - நெய்தல்.
முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் - பாலை .

இது அத்தனையும் ஒன்று சேர்ந்த  நிலம் - பூவை (எ )  பூலாங்குறிச்சி.

பூலாங்குறிச்சி - தென் தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள ஓர் அழகான பாரதிராஜா பட  கிராமம் .


ஏன் இந்த தளம் ...?

பூலாங்குறிச்சி  யின்  வரலாற்றை வரும் தலைமுறையினருக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதற்கான ஒரு சிறிய முயற்சி இது. மலை , வயல், கோவில் , ஊருணி , மருத்துவமனை , பள்ளி , கல்லூரி என சகலமும் உள்ள நம்ம மண்ணை பற்றியும் , வீரத்திற்கும், ஈரத்திற்கும் , உழைப்புக்கும் , நேர்மைக்கும் , வணிகத்திற்கும் பெயர் பெற்ற நம் மண்ணின் மைந்தர்களைப் பற்றியும் ஒரு வரலாற்று பதிவு தான் இந்த தளம் .



வாருங்கள் வரலாறு படைப்போம் .....! ஏன்னா இது நம்ம ஊருப்பா ...!









என்றென்றும் புன்னகையுடன் J


ஜீவன்சுப்பு .